• Apr 17 2026

சந்தன கத்ரியாராச்சி கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை

dorin / Apr 16th 2026, 7:28 pm
image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கைது செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட சோதனை பிடியாணையின்படி, இன்று (16) காலை பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாம்பே பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சியின் வீடு சோதனையிடப்பட்டது. 

இந்த சோதனையின் போது பின்வரும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

ஒரு கைக்குண்டு  இரண்டு T-56 ரக மெகசின்கள் ,221 T-56 ரகத் தோட்டாக்கள் ,103, 0.22 ரகத் தோட்டாக்கள் ,31, 84S ரகத் தோட்டாக்கள் 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான விவசாய நிலத்திற்காக வழங்கப்பட்ட ஒரு 12 போர் (12-bore) ரக துப்பாக்கி 

சந்தேகநபர் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தன கத்ரியாராச்சி கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கைது செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட சோதனை பிடியாணையின்படி, இன்று (16) காலை பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாம்பே பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சியின் வீடு சோதனையிடப்பட்டது. இந்த சோதனையின் போது பின்வரும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளனஒரு கைக்குண்டு  இரண்டு T-56 ரக மெகசின்கள் ,221 T-56 ரகத் தோட்டாக்கள் ,103, 0.22 ரகத் தோட்டாக்கள் ,31, 84S ரகத் தோட்டாக்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான விவசாய நிலத்திற்காக வழங்கப்பட்ட ஒரு 12 போர் (12-bore) ரக துப்பாக்கி சந்தேகநபர் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement