• May 17 2024

புளொட்டின் பிரதிதலைவருக்கு அமைச்சர் டக்ளஸ் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் இறுதி அஞ்சலி...!

Sharmi / Feb 24th 2024, 1:28 pm
image

Advertisement

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பிரதித் தலைவரும்,  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளருமான ஆர்ஆர் என அழைக்கப்படும்இ வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) நேற்றுமுன்தினம்(22)  காலமானார்.

அதேவேளை, புளொட் அமைப்பின் பிரதிதலைவரின் பூதவுடல் கொழும்பு பம்பலப்பட்டியில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவரது பூதவுடலுக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இறுதிநிகழ்வுகள் நாளையதினம்(25) வவுனியாவில்  இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



புளொட்டின் பிரதிதலைவருக்கு அமைச்சர் டக்ளஸ் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் இறுதி அஞ்சலி. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பிரதித் தலைவரும்,  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளருமான ஆர்ஆர் என அழைக்கப்படும்இ வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) நேற்றுமுன்தினம்(22)  காலமானார்.அதேவேளை, புளொட் அமைப்பின் பிரதிதலைவரின் பூதவுடல் கொழும்பு பம்பலப்பட்டியில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இதன்போது அவரது பூதவுடலுக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இறுதிநிகழ்வுகள் நாளையதினம்(25) வவுனியாவில்  இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement