பூநகரி வாடியடியில் 55வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் பொங்கல் தின நிகழ்வும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வும் இன்றையதினம் பொலிஸார், பூநகரி பிரதேச செயலகம், பூநகரி பிரதேச அரச திணைக்களங்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இதன்போது சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் த.அகிலன், பூநகரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிளிநொச்சி 55படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, இராணுவ உயர் அதிகாரிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.