• Sep 20 2024

மறைந்த இளம் ஊடகவியலாளர் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்!

Chithra / Sep 3rd 2024, 11:32 am
image

Advertisement

 

கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது , மறைந்த ஊடகவியலாளரின் உருவப்படத்திற்கு யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு.செல்வக்குமார் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார்.

இந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி அவர் ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர். 

இந்நிலையில் கடந்த 2021 செப்டம்பர் 2ம் திகதி கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


மறைந்த இளம் ஊடகவியலாளர் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்  கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.இதன்போது , மறைந்த ஊடகவியலாளரின் உருவப்படத்திற்கு யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு.செல்வக்குமார் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார்.இந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி அவர் ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர். இந்நிலையில் கடந்த 2021 செப்டம்பர் 2ம் திகதி கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement