• Jun 19 2025

4 வயது மகளை கொடூரமாக தாக்கிய கர்ப்பிணித் தாய்;தலைமறைவான தந்தை

Chithra / Jun 19th 2025, 8:20 am
image


4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய கர்ப்பிணித் தாய் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கம்பஹாவில் உள்ள ஜா - எல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜா - எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான கர்ப்பிணித் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய கர்ப்பிணித் தாயொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். 

காயமடைந்த மகள் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான கர்ப்பிணித் தாய், தனது கணவருடன் இணைந்து நீண்ட நாட்களாக தனது 4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்தி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய கணவன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா - எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

4 வயது மகளை கொடூரமாக தாக்கிய கர்ப்பிணித் தாய்;தலைமறைவான தந்தை 4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய கர்ப்பிணித் தாய் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் கம்பஹாவில் உள்ள ஜா - எல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.ஜா - எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான கர்ப்பிணித் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய கர்ப்பிணித் தாயொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். காயமடைந்த மகள் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபரான கர்ப்பிணித் தாய், தனது கணவருடன் இணைந்து நீண்ட நாட்களாக தனது 4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்தி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய கணவன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா - எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement