உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டதன தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இன்று சனிக்கிழமை (09) இடம்பெற்றது.
பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து தேசிய ஆதிவாசிகள் தின கொண்டாட்டத்தை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்ததுடன், அமைதி மற்றும் சுபீட்சத்திற்காக ஆசீர்வதிக்கப்பட்ட பாரம்பரிய “கிரி கொரஹா” சம்பிரதாயம் உட்பட ஆதிவாசிகளின் தனித்துவமான பல்வேறு கலாசார அம்சங்களுடன் இந்த நிகழ்வு கோலாகலமாக முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முன்னாள் ஆதிவாசிகள் தலைவர் ஊருவரிகே திஸாஹாமியின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தி நிகழ்வை ஆரம்பித்தார். பின்னர் அருங்காட்சியக வளாகத்தில் ஜனாதிபதி, வெள்ளை சந்தன செடியையும் நாட்டி வைத்தார்.
இதன்போது இலங்கையின் பிரதான ஆதிவாசியினத் தலைவரான, விஷ்வகீர்த்தி ஸ்ரீ வனஸ்பதி ஊருவரிகே வன்னியலெத்தோ, ஆதிவாசியினரின் பிரச்சினைகள் அடங்கிய ஒரு மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், நினைவுப் பரிசொன்றையும் வழங்கிவைத்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆதிவாசியின தலைவருக்கு அன்பளிப்பும் வழங்கி வைக்கப்பட்டது.
ஆதிவாசியின சமூகத்தினரால் கூடங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொருட்களை ஜனாதிபதி பார்வையிட்டார். பின்னர் இலங்கையில் முதல் ஆதிவாசி மூலிகை சவர்க்காரமான "கைரி" அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஆயுர்வேத சவர்க்காரத் தயாரிப்பு பயிற்சியை நிறைவு செய்த ஆதிவாசியின பெண்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி அநுரவுடன் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி உள்ளிட்ட அமைச்சர்கள், அரச அதிகாரிகள், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வொல்ஷ், கனேடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி பங்குபற்றலுடன் உலக ஆதிவாசிகள் தினம்; கலாசார நிகழ்வுகளுடன் கோலாகலமான வைபவம் உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டதன தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இன்று சனிக்கிழமை (09) இடம்பெற்றது. பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து தேசிய ஆதிவாசிகள் தின கொண்டாட்டத்தை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்ததுடன், அமைதி மற்றும் சுபீட்சத்திற்காக ஆசீர்வதிக்கப்பட்ட பாரம்பரிய “கிரி கொரஹா” சம்பிரதாயம் உட்பட ஆதிவாசிகளின் தனித்துவமான பல்வேறு கலாசார அம்சங்களுடன் இந்த நிகழ்வு கோலாகலமாக முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முன்னாள் ஆதிவாசிகள் தலைவர் ஊருவரிகே திஸாஹாமியின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தி நிகழ்வை ஆரம்பித்தார். பின்னர் அருங்காட்சியக வளாகத்தில் ஜனாதிபதி, வெள்ளை சந்தன செடியையும் நாட்டி வைத்தார். இதன்போது இலங்கையின் பிரதான ஆதிவாசியினத் தலைவரான, விஷ்வகீர்த்தி ஸ்ரீ வனஸ்பதி ஊருவரிகே வன்னியலெத்தோ, ஆதிவாசியினரின் பிரச்சினைகள் அடங்கிய ஒரு மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், நினைவுப் பரிசொன்றையும் வழங்கிவைத்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆதிவாசியின தலைவருக்கு அன்பளிப்பும் வழங்கி வைக்கப்பட்டது.ஆதிவாசியின சமூகத்தினரால் கூடங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொருட்களை ஜனாதிபதி பார்வையிட்டார். பின்னர் இலங்கையில் முதல் ஆதிவாசி மூலிகை சவர்க்காரமான "கைரி" அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஆயுர்வேத சவர்க்காரத் தயாரிப்பு பயிற்சியை நிறைவு செய்த ஆதிவாசியின பெண்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.ஜனாதிபதி அநுரவுடன் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி உள்ளிட்ட அமைச்சர்கள், அரச அதிகாரிகள், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வொல்ஷ், கனேடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.