• Feb 01 2025

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் - ஆளுநரிடம் ரவிகரன் எம்.பி முன்வைத்த கோரிக்கை

Chithra / Feb 1st 2025, 9:31 am
image

 வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோருக்கிடையில் நேற்றையதினம்  யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

வெள்ள அனர்த்தம்காரணமாக ஏற்பட்டுள்ள நெல் அழிவுகளுக்குரிய இழப்பீடுகள் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படுதல், 

நெல்லுக்கான விலையை நிர்ணயித்தல், நெல் சந்தைப்படுத்தலில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்தல், காட்டு யானைகளால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அத்தோடு நெல் உலரவிடுதலில் விவசாயிகள் எதிர்நோக்கும் சிக்கல் நிலமைகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் கூழாமுறிப்புப் பகுதியில் சுமார் ஒரு இலட்சம் நெல் மூட்டைகளை களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய களஞ்சியசாலை ஒன்று கடந்த காலத்தில் உலக வங்கியின் நிதிஉதவியில் அமைக்கப்பட்டுள்ளது. 

எனவே அந்த நெற்களஞ்சியசாலைக்கு நெல் உலரவிடும் இயந்திரப் பொறியினை வழங்கினால், இலகுவாக நெல்லினை உலரவைப்பதுடன், களஞ்சியப்படுத்தவும் முடியுமென்ற ஆலோசனையும் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆளுநர் வேதநாயகனிடம் முன்வைக்கப்பட்டது.

இந் நிலையில் குறித்த நெல் உலரவிடும் பொறித்தொகுதியை முல்லைத்தீவிற்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஆளுநர் இதன்போது தெரிவித்திருந்தார்.

இந்தச் சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகாரச பையின் தலைவர் பென்னம்பலம் சத்தியமூர்த்தி, உபதலைவர் இ.வேதநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் - ஆளுநரிடம் ரவிகரன் எம்.பி முன்வைத்த கோரிக்கை  வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோருக்கிடையில் நேற்றையதினம்  யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.வெள்ள அனர்த்தம்காரணமாக ஏற்பட்டுள்ள நெல் அழிவுகளுக்குரிய இழப்பீடுகள் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படுதல், நெல்லுக்கான விலையை நிர்ணயித்தல், நெல் சந்தைப்படுத்தலில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்தல், காட்டு யானைகளால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.அத்தோடு நெல் உலரவிடுதலில் விவசாயிகள் எதிர்நோக்கும் சிக்கல் நிலமைகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் கூழாமுறிப்புப் பகுதியில் சுமார் ஒரு இலட்சம் நெல் மூட்டைகளை களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய களஞ்சியசாலை ஒன்று கடந்த காலத்தில் உலக வங்கியின் நிதிஉதவியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நெற்களஞ்சியசாலைக்கு நெல் உலரவிடும் இயந்திரப் பொறியினை வழங்கினால், இலகுவாக நெல்லினை உலரவைப்பதுடன், களஞ்சியப்படுத்தவும் முடியுமென்ற ஆலோசனையும் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆளுநர் வேதநாயகனிடம் முன்வைக்கப்பட்டது.இந் நிலையில் குறித்த நெல் உலரவிடும் பொறித்தொகுதியை முல்லைத்தீவிற்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஆளுநர் இதன்போது தெரிவித்திருந்தார்.இந்தச் சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகாரச பையின் தலைவர் பென்னம்பலம் சத்தியமூர்த்தி, உபதலைவர் இ.வேதநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement