• Jun 25 2025

கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

shanuja / Jun 24th 2025, 7:56 pm
image

வவுனியா - செட்டிக்குளம்  கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய  அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


வித்தியாலய மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


போராட்டத்தில் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும், உயர்தர பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பாடசாலையில் நன்றாக கற்பிக்கும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது,  விஞ்ஞான பாடம் மற்றும் தமிழ் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இரண்டு வருடங்களாக நியமிக்கப்படவில்லை என்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. 


அத்துடன் பாடசாலைக்கு ஒழுங்கு முறையான தளபாடங்கள் இல்லாமல் உள்ளது.  இதனால் மாணவர்கள் மிகக் குறைந்தளவிலான புள்ளிகளையே பெற்று வருகின்றனர். எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு பாடசாலையின் ஒழுங்கற்ற அதிபரே காரணம் என பெற்றோர்களால் போராட்டத்தின் போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.


இந்த நிலையில் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து மாணவர்களின் நலன்கருதி  கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என எழுத்துமூலம் வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் வவுனியா - செட்டிக்குளம்  கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய  அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. வித்தியாலய மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும், உயர்தர பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பாடசாலையில் நன்றாக கற்பிக்கும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது,  விஞ்ஞான பாடம் மற்றும் தமிழ் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இரண்டு வருடங்களாக நியமிக்கப்படவில்லை என்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அத்துடன் பாடசாலைக்கு ஒழுங்கு முறையான தளபாடங்கள் இல்லாமல் உள்ளது.  இதனால் மாணவர்கள் மிகக் குறைந்தளவிலான புள்ளிகளையே பெற்று வருகின்றனர். எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு பாடசாலையின் ஒழுங்கற்ற அதிபரே காரணம் என பெற்றோர்களால் போராட்டத்தின் போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.இந்த நிலையில் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து மாணவர்களின் நலன்கருதி  கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என எழுத்துமூலம் வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement