அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி மதநாயக்க உட்பட அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.