• Sep 08 2024

யாழில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு...!

Sharmi / Jun 8th 2024, 12:00 pm
image

Advertisement

யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பூரண அனுசரணையுடன் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் செல்வபுரம் கிராமத்தில் சங்கத்தின் அங்கத்தவர்களின் 50 மணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் இணைப்பாளர் எஸ். இன்பம் உள்ளிட்ட அச் சங்கத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



யாழில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு. யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பூரண அனுசரணையுடன் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் செல்வபுரம் கிராமத்தில் சங்கத்தின் அங்கத்தவர்களின் 50 மணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.இந் நிகழ்வில் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் இணைப்பாளர் எஸ். இன்பம் உள்ளிட்ட அச் சங்கத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement