• Sep 20 2024

புதுக்குடியிருப்பு சந்தைப்பகுதி திடீர் சுற்றிவளைப்பு! அதிரடியாக கைப்பற்றப்பட்ட பொருட்கள்

Chithra / Sep 4th 2024, 4:10 pm
image

Advertisement

புதுக்குடியிருப்பு  சந்தைப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றினை  புதுக்குடியிருப்பு சுகாதார துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு  நகரில் அமைந்துள்ள  சந்தைப்பகுதியினை புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் மற்றும் பிரதேசபையினர் இணைந்து இன்றையதினம்திடீர் சுற்றிவளைப்பினை  மேற்கொண்டிருந்தனர்.

குறித்த பரிசோதனை நடவடிக்கையில் பாவனைக்கு உதவாத வகையில் இருந்த மரக்கறிகள், மீன்கள் , இறால்  , பழங்கள் , உப்பு விற்பனையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த விற்பனையாளர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பு பரிசோதனை நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பி.சத்தியரூபன் உள்ளிட்ட சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபையினர் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.


புதுக்குடியிருப்பு சந்தைப்பகுதி திடீர் சுற்றிவளைப்பு அதிரடியாக கைப்பற்றப்பட்ட பொருட்கள் புதுக்குடியிருப்பு  சந்தைப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றினை  புதுக்குடியிருப்பு சுகாதார துறையினர் மேற்கொண்டுள்ளனர்.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு  நகரில் அமைந்துள்ள  சந்தைப்பகுதியினை புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் மற்றும் பிரதேசபையினர் இணைந்து இன்றையதினம்திடீர் சுற்றிவளைப்பினை  மேற்கொண்டிருந்தனர்.குறித்த பரிசோதனை நடவடிக்கையில் பாவனைக்கு உதவாத வகையில் இருந்த மரக்கறிகள், மீன்கள் , இறால்  , பழங்கள் , உப்பு விற்பனையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த விற்பனையாளர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.குறித்த சுற்றிவளைப்பு பரிசோதனை நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பி.சத்தியரூபன் உள்ளிட்ட சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபையினர் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement