• Sep 28 2024

யாழில் 'பிக்மீ' முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்!

Chithra / Sep 26th 2024, 2:44 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் பிக்மீ முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான சாரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதிலும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,

யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக நபர் ஒருவர், பிக்மீ அப் மூலம் முச்சக்கர வண்டி சேவையை நாடியபோது, அவ்விடத்திற்கு சென்ற என்னை, முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில்  நின்ற முச்சக்கர வண்டி சாரதி, சேவையை நாடிய நபரை என்னை ஏற்ற விடாது தடுத்து என் மீது தாக்குதல் நடத்தினார்.

என் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன். 

முறைப்பாட்டின் பிரகாரம் தாக்குதலாளியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, அவர் முன் விசாரணைகளை மேற் கொண்ட பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் என்னை ஏசி, தாக்குதலாளிக்கு சார்பாக நடந்து கொண்டார்.

தாக்குதலாளியும், குறித்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் முன்பாக என்னை வெட்டுவேன் என மிரட்டினார்.

அதனால் நான் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி விட்டேன். 

இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளேன் என தெரிவித்தார்.

யாழில் 'பிக்மீ' முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல் யாழ்ப்பாணத்தில் பிக்மீ முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலுக்கு இலக்கான சாரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதிலும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டியுள்ளார்.சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக நபர் ஒருவர், பிக்மீ அப் மூலம் முச்சக்கர வண்டி சேவையை நாடியபோது, அவ்விடத்திற்கு சென்ற என்னை, முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில்  நின்ற முச்சக்கர வண்டி சாரதி, சேவையை நாடிய நபரை என்னை ஏற்ற விடாது தடுத்து என் மீது தாக்குதல் நடத்தினார்.என் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன். முறைப்பாட்டின் பிரகாரம் தாக்குதலாளியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, அவர் முன் விசாரணைகளை மேற் கொண்ட பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் என்னை ஏசி, தாக்குதலாளிக்கு சார்பாக நடந்து கொண்டார்.தாக்குதலாளியும், குறித்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் முன்பாக என்னை வெட்டுவேன் என மிரட்டினார்.அதனால் நான் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி விட்டேன். இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளேன் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement