• Jul 15 2025

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றும் மழை; காற்று, இடிமின்னல் தொடர்பில் எச்சரிக்கை

Chithra / Jul 15th 2025, 7:59 am
image

 

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். 

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல முறை மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக  காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில்ல் நேற்று இரவு காற்று மற்றும் இடியுடனான பலத்த மழை பெய்தது. 

சுழற்றி அடிக்கும் காற்றாலும் இடி, மின்னல்களாலும் பலத்த சேதங்கள் ஏற்படலாம் என்ற நிலையில் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. 

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றும் மழை; காற்று, இடிமின்னல் தொடர்பில் எச்சரிக்கை  நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல முறை மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக  காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.இந்நிலையில் யாழ்ப்பாணத்தில்ல் நேற்று இரவு காற்று மற்றும் இடியுடனான பலத்த மழை பெய்தது. சுழற்றி அடிக்கும் காற்றாலும் இடி, மின்னல்களாலும் பலத்த சேதங்கள் ஏற்படலாம் என்ற நிலையில் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement