ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரான பசில் ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தெரியவருகின்றது.
நேற்றைய தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட ஒரு வெளிப்படையான நடவடிக்கையாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு சில நிவாரணங்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.