• Sep 21 2024

வேட்புமனு தாக்கல் செய்ய ரணில், சஜித் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வருகை

Chithra / Aug 15th 2024, 10:19 am
image

Advertisement


 

ஜனாதிபதித் தோ்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்காக  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளாா்.

2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வேட்புமனுக்களைச் சமா்ப்பிப்பதற்காக தமிழ்ப் பொது வேட்பாளா் பா.அாியநேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ச, எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச ஆகியோா் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளனா்.

ராஜகிரியில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

வேட்புமனுக்களை ஏற்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய ரணில், சஜித் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வருகை  ஜனாதிபதித் தோ்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்காக  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளாா்.2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் வேட்புமனுக்களைச் சமா்ப்பிப்பதற்காக தமிழ்ப் பொது வேட்பாளா் பா.அாியநேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ச, எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச ஆகியோா் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளனா்.ராஜகிரியில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.வேட்புமனுக்களை ஏற்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement