• Oct 17 2024

தெல்லிப்பழையில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கிய உணவகத்துக்கு சீல்!

Tamil nila / May 17th 2024, 10:54 pm
image

Advertisement

தெல்லிப்பழை பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள  உணவகம் ஒன்றில் தரமற்ற இறைச்சிக் கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த உணவகத்துக்கு  சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை குறித்த உணவகத்தில் மாட்டு இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட வேளை குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டொன்று தென்பட்டுள்ளது.

அதனை அடுத்து குறித்த பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருடன் கடையினுள் இருந்தவாறு குறித்த ஊடகவியலாளர் தொடர்பு கொண்டார். உடனடியாக அங்கு வந்து பார்வையிடும்படி கோரியிருந்தார். இருப்பினும் அன்றையதினம் குறித்த சம்பவம் தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதரால் நடவடிக்கை எவையும் முன்னெடுக்கப்படவில்லை. 

இருப்பினும் குறித்த ஊடகவியலாளர் கடையில் பெற்றுக்கொண்ட உணவிற்காக பற்றுச்சீட்டு மற்றும் குறித்த இறைச்சி உள்ளிட்ட புகைப்படம் என்பவற்றை ஆவணப்படுத்தி, தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். 

அதனைத் தொடர்ந்து மோசமான இறைச்சியை வழங்கினார் என்பது தொடர்பான முறைப்பாடு ஒன்றினை குறித்த ஊடகவியலாளர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்தார்.

முறைப்பாட்டு கடிதத்தினை ஆதாரமாகக் கொண்டு நேற்றையதினம் குறித்த ஹோட்டலை சோதனைக்கு உட்படுத்திய பொது சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்கு உதவாத இறைச்சி இருந்துள்ளமையைக் கண்டறிந்துள்ளனர்  அத்துடன் தூய்மையற்ற முறையிலே உணவுகளை கையாண்டமை இறைச்சினை கொல்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தெரிய வந்தன.

அதனைத் தொடர்ந்து குறித்த உணவகம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு  இன்றையதினம் நீதி மன்றால் 65,000 ரூபா தண்டப்பணம் அளவிடப்பட்டு உணவகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில், குறித்த உணவகத்தில் தூர தேசத்திலிருந்தும் பொதுமக்கள் வருகின்றனர். தற்செயலாக நானும் அங்கு செல்ல நேரிட்டது. நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் உணவினை கொள்வனவு செய்கிறோம். ஆனால் குறித்த இறைச்சியை பார்த்தவுடன் அதிர்ந்துவிட்டேன். உடனடியாக நடவடிக்கை எடுக்க சுகாதாரப்பிரிவினரும் ஒத்துழைக்கவில்லை. பாரிய போராட்டத்தின் பின்னரே இந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இறுதிவரை குறித்த இறைச்சி மாட்டு இறைச்சியா நாய் இறைச்சியா என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இது தொடர்பில் சுகாதாரப்பிரிவினர் மிகக்கவனமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தெல்லிப்பழையில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கிய உணவகத்துக்கு சீல் தெல்லிப்பழை பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள  உணவகம் ஒன்றில் தரமற்ற இறைச்சிக் கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த உணவகத்துக்கு  சீல் வைக்கப்பட்டுள்ளது.ஊடகவியலாளர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை குறித்த உணவகத்தில் மாட்டு இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட வேளை குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டொன்று தென்பட்டுள்ளது.அதனை அடுத்து குறித்த பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருடன் கடையினுள் இருந்தவாறு குறித்த ஊடகவியலாளர் தொடர்பு கொண்டார். உடனடியாக அங்கு வந்து பார்வையிடும்படி கோரியிருந்தார். இருப்பினும் அன்றையதினம் குறித்த சம்பவம் தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதரால் நடவடிக்கை எவையும் முன்னெடுக்கப்படவில்லை. இருப்பினும் குறித்த ஊடகவியலாளர் கடையில் பெற்றுக்கொண்ட உணவிற்காக பற்றுச்சீட்டு மற்றும் குறித்த இறைச்சி உள்ளிட்ட புகைப்படம் என்பவற்றை ஆவணப்படுத்தி, தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து மோசமான இறைச்சியை வழங்கினார் என்பது தொடர்பான முறைப்பாடு ஒன்றினை குறித்த ஊடகவியலாளர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்தார்.முறைப்பாட்டு கடிதத்தினை ஆதாரமாகக் கொண்டு நேற்றையதினம் குறித்த ஹோட்டலை சோதனைக்கு உட்படுத்திய பொது சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்கு உதவாத இறைச்சி இருந்துள்ளமையைக் கண்டறிந்துள்ளனர்  அத்துடன் தூய்மையற்ற முறையிலே உணவுகளை கையாண்டமை இறைச்சினை கொல்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தெரிய வந்தன.அதனைத் தொடர்ந்து குறித்த உணவகம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு  இன்றையதினம் நீதி மன்றால் 65,000 ரூபா தண்டப்பணம் அளவிடப்பட்டு உணவகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில், குறித்த உணவகத்தில் தூர தேசத்திலிருந்தும் பொதுமக்கள் வருகின்றனர். தற்செயலாக நானும் அங்கு செல்ல நேரிட்டது. நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் உணவினை கொள்வனவு செய்கிறோம். ஆனால் குறித்த இறைச்சியை பார்த்தவுடன் அதிர்ந்துவிட்டேன். உடனடியாக நடவடிக்கை எடுக்க சுகாதாரப்பிரிவினரும் ஒத்துழைக்கவில்லை. பாரிய போராட்டத்தின் பின்னரே இந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இறுதிவரை குறித்த இறைச்சி மாட்டு இறைச்சியா நாய் இறைச்சியா என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இது தொடர்பில் சுகாதாரப்பிரிவினர் மிகக்கவனமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement