பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானமொன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (08.04.2023) காலை இடம்பெற்றுள்ளது.
குவைட்டில் இருந்து வந்த நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்று காலை பெய்த கனமழை பார்வைத்திறனில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், சில விமானங்களின் பயணங்களும் தாமதமாகியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவைட்டில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 230D விமானம் இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் விமானம் காலை 6.10 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நேற்று (07) மாலை 6.25 மணியளவில் துபாய்க்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யூ. எல். 225 என்ற விமானம் சுமார் 15 மணி நேர தாமதத்திற்குப் பிறகு காலை 9.15 மணியளவில் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் ஜப்பானின் நரிட்டா நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யு. எல். 454 என்ற விமானம் இன்று அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டது.
அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நேற்று இரவு 11.40 மணியளவில் இந்தியாவின் மும்பைக்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் யு.எல். 141 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மும்பையிலிருந்து இன்று காலை 05.35க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து நேற்று இரவு 07.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த சைனா ஈஸ்டன் ஏர்லைன்ஸ் விமானம் MU-231, கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றி பெய்த கடும் மழை காரணமாக மாலைதீவின் மாலே விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
திருப்பி அனுப்பப்பட்ட விமானம் இலங்கையில் விமான சேவைகள் கடும் பாதிப்பு - வெளியான காரணம் samugammedia பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானமொன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் இன்று (08.04.2023) காலை இடம்பெற்றுள்ளது.குவைட்டில் இருந்து வந்த நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்று காலை பெய்த கனமழை பார்வைத்திறனில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், சில விமானங்களின் பயணங்களும் தாமதமாகியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குவைட்டில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 230D விமானம் இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் விமானம் காலை 6.10 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நேற்று (07) மாலை 6.25 மணியளவில் துபாய்க்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யூ. எல். 225 என்ற விமானம் சுமார் 15 மணி நேர தாமதத்திற்குப் பிறகு காலை 9.15 மணியளவில் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் ஜப்பானின் நரிட்டா நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யு. எல். 454 என்ற விமானம் இன்று அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டது.அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நேற்று இரவு 11.40 மணியளவில் இந்தியாவின் மும்பைக்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் யு.எல். 141 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மும்பையிலிருந்து இன்று காலை 05.35க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து நேற்று இரவு 07.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த சைனா ஈஸ்டன் ஏர்லைன்ஸ் விமானம் MU-231, கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றி பெய்த கடும் மழை காரணமாக மாலைதீவின் மாலே விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.