• Feb 24 2025

அரசாங்கம் மீது பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரிப்பு – ஆய்வில் தகவல்

Tharmini / Feb 24th 2025, 11:55 am
image

அரசாங்கத்திற்கான பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு தேர்தலுக்கு பின்னர் வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 24 வீதமாக காணப்பட்ட அரசாங்கத்திற்கான பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு தற்போது 62 வீதமாக அதிகரித்துள்ளது.

“நாடு எண்ணும் விதம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் புதிய பெறுபேறுகளின் அடிப்படையில் இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 7 வீதமாக காணப்பட்டதாகவும் இவ்வாண்டின் அது 62 வீமதாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பாக எடுத்துக்கொள்ள முடியும் எனவும் வெரிட்டே ரிசர்ச் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதல் முறையாக, பெரும்பான்மையான மக்கள், அதாவது 55 வீதமானோர் , இலங்கையின் பொருளாதார நிலைமை மேம்பட்டு வருவதாக நம்புவதாக வெரிட் ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் இன்னும் பலவீனமான நிலையில் இருப்பதாக 47 வீத மக்கள் நம்புவதாக வெரிட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் மீது பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரிப்பு – ஆய்வில் தகவல் அரசாங்கத்திற்கான பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு தேர்தலுக்கு பின்னர் வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 24 வீதமாக காணப்பட்ட அரசாங்கத்திற்கான பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு தற்போது 62 வீதமாக அதிகரித்துள்ளது.“நாடு எண்ணும் விதம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் புதிய பெறுபேறுகளின் அடிப்படையில் இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 7 வீதமாக காணப்பட்டதாகவும் இவ்வாண்டின் அது 62 வீமதாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பாக எடுத்துக்கொள்ள முடியும் எனவும் வெரிட்டே ரிசர்ச் சுட்டிக்காட்டியுள்ளது.பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதல் முறையாக, பெரும்பான்மையான மக்கள், அதாவது 55 வீதமானோர் , இலங்கையின் பொருளாதார நிலைமை மேம்பட்டு வருவதாக நம்புவதாக வெரிட் ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.எனினும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் இன்னும் பலவீனமான நிலையில் இருப்பதாக 47 வீத மக்கள் நம்புவதாக வெரிட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement