யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கின்ற வீதி 35 வருடங்களின் பின் இன்று காலை 6.00 மணியளவில் முழுமையாக திறந்து வைக்கப்பட்டது.
இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் வீதியே இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை- பொன்னாலை வீதியுடன் இணையும் பலாலி சந்தி வரையான 2.5 கிலோமீற்றர் நீளமான வீதியே இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த வசாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வசாவிளான் சந்தியூடாக அச்சுவேலி செல்லும் வீதி திறக்கப்பட்டது.
மேற்குறித்த வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்ட போதிலும் குறித்த பகுதியில் செல்லும் பயணிகளுக்கு மிக கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியானது பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இராணுவக் குடியிருப்பினூடாகச் செல்லும் வீதியாகும்.
இந்த வீதியினூடாகப் பயணிக்கும் அனைவரும் கீழ்க்காணும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1. வீதி திறக்கப்படும் நேரம் மு.ப 06.00 தொடக்கம் பி.ப 05.00 வரை மாத்திரமே.
2. வீதியினுள் பயணிக்கும் வாகனங்கள் இடையில் நிறுத்துதல், திருப்புதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
3. வீதியில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் வீதியின் இருபுறமும் புகைப்படம் எடுத்தல் ஒளிப்பதிவு செய்தல் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது.
4. இந்த வீதியில் நடைபயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.
5. பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் தவிர்ந்த ஏனைய பாரவூர்திகள் பயணிக்கத் தடை.
6. இந்த வீதியில் செல்லக்கூடிய வேகம் ஆகக்கூடியது 40 கி.மீ மாத்திரமே.
7. இந்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் அனைவரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆவணங்களை பயணத்தின் போது வைத்திருத்தல் அவசியமாகும்.
மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை மீறுதல் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய குற்றமாகும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழில் 35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வீதி; விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கின்ற வீதி 35 வருடங்களின் பின் இன்று காலை 6.00 மணியளவில் முழுமையாக திறந்து வைக்கப்பட்டது.இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் வீதியே இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை- பொன்னாலை வீதியுடன் இணையும் பலாலி சந்தி வரையான 2.5 கிலோமீற்றர் நீளமான வீதியே இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த வசாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வசாவிளான் சந்தியூடாக அச்சுவேலி செல்லும் வீதி திறக்கப்பட்டது. மேற்குறித்த வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்ட போதிலும் குறித்த பகுதியில் செல்லும் பயணிகளுக்கு மிக கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வீதியானது பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இராணுவக் குடியிருப்பினூடாகச் செல்லும் வீதியாகும்.இந்த வீதியினூடாகப் பயணிக்கும் அனைவரும் கீழ்க்காணும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீதியால் பயணிப்போருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில்,1. வீதி திறக்கப்படும் நேரம் மு.ப 06.00 தொடக்கம் பி.ப 05.00 வரை மாத்திரமே.2. வீதியினுள் பயணிக்கும் வாகனங்கள் இடையில் நிறுத்துதல், திருப்புதல் தடைசெய்யப்பட்டுள்ளது.3. வீதியில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் வீதியின் இருபுறமும் புகைப்படம் எடுத்தல் ஒளிப்பதிவு செய்தல் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது.4. இந்த வீதியில் நடைபயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. 5. பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் தவிர்ந்த ஏனைய பாரவூர்திகள் பயணிக்கத் தடை.6. இந்த வீதியில் செல்லக்கூடிய வேகம் ஆகக்கூடியது 40 கி.மீ மாத்திரமே.7. இந்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் அனைவரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆவணங்களை பயணத்தின் போது வைத்திருத்தல் அவசியமாகும்.மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை மீறுதல் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய குற்றமாகும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.