• Mar 18 2025

122 கோடி ரூபா இழப்பீடு; ரணில் தனது பதவியை தக்கவைக்க வழங்கிய இலஞ்சம் - அமைச்சர் நளிந்த பகிரங்கம்

Chithra / Feb 10th 2025, 8:32 am
image


ஆட்சியாளர்கள் தமது கட்சியின் ஆதரவாளர்களை பேரவாவியில் மூழ்கடிக்க செய்து விட்டு தாம் நட்டயீட்டு சமுத்திரத்தில் நன்றாக நீந்தி குளித்துள்ளனர். ரணில் விக்கிமரசிங்க தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக தன்னுடன் இருந்தவர்களுக்கு அரச திறைசேரியிலிருந்து பெற்றுக்கொடுத்த இலஞ்சமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பேராதனையில்  இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதுடன் அவர் மேலும் தெரிவித்ததாவது,

எமது நாட்டில் பேரிடர் ஒன்று ஏற்படுமானால் ஒரு நபருக்கு அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாவையே வழங்க முடியும். 

 ஆனால் ரணில் விக்கிரமசிங்க சட்டத்திட்டங்களை மாற்றி தேவையான வகையில் நட்டயீட்டை பெற்றுக்கொள்வதற்கான முறைமையை  உருவாக்கியுள்ளார்.

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 இலட்சம் முதல் 980 இலட்சம் வரை நட்டயீட்டை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவர்கள் நட்டயீட்டை மாத்திரம் அல்ல. சில நிறுவனங்களிடமிருந்து காப்புறுதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர். 

நாம் வெளியிட்ட பெயர் பட்டியிலிருந்து யார் காப்புறுதிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பதை காப்புறுதி நிறுவனங்கள் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். 

அடுத்ததாக அவர்களது அசையும் அசையாத சொத்துக்கள் 800 முதல் 900 இலட்சமாக இருந்தால் அவர்களது சொத்துக்கள் தொடர்பிலான அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்பிக்க வேண்டும்.

அதிக நட்டயீட்டை பெற்றுக்கொள்வதற்காக சிலர் தமது வீட்டில் நகைகள், இரத்தினகற்கள் இருந்தாக தெரிவித்துள்ளனர். 

நட்டயீட்டைப் பெற்றுக்கொண்டவர்களின் பிரதேசங்களில் உள்ள மக்கள் எம்மை அழைத்து அவ்வாறான சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனக்கூறுகிறார்கள். இரண்டு ஜன்னல்கள் மாத்திரமே சேதமடைந்திருந்தாக கூறுகின்றனர். 

ஆனால் இவர்கள் எவ்வாறு இந்தளவு நிதியை பெற்றுக்கொண்டனர்? அவர்கள் தமது கட்சியின் ஆதரவாளர்களை பெரவாவியில் முழ்கடிக்கச்செய்து விட்டு தாம் நட்டயீட்டு சமுத்திரத்தில் நன்றாக நீந்தி நீந்தி குளித்துள்ளனர். இதுவே தற்போது புலப்படுகிறது.

எனவே இது தொடர்பில் நாம் விசாரணைகளை முன்னெடுப்போம். என்றார். 

122 கோடி ரூபா இழப்பீடு; ரணில் தனது பதவியை தக்கவைக்க வழங்கிய இலஞ்சம் - அமைச்சர் நளிந்த பகிரங்கம் ஆட்சியாளர்கள் தமது கட்சியின் ஆதரவாளர்களை பேரவாவியில் மூழ்கடிக்க செய்து விட்டு தாம் நட்டயீட்டு சமுத்திரத்தில் நன்றாக நீந்தி குளித்துள்ளனர். ரணில் விக்கிமரசிங்க தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக தன்னுடன் இருந்தவர்களுக்கு அரச திறைசேரியிலிருந்து பெற்றுக்கொடுத்த இலஞ்சமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.பேராதனையில்  இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதுடன் அவர் மேலும் தெரிவித்ததாவது,எமது நாட்டில் பேரிடர் ஒன்று ஏற்படுமானால் ஒரு நபருக்கு அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாவையே வழங்க முடியும்.  ஆனால் ரணில் விக்கிரமசிங்க சட்டத்திட்டங்களை மாற்றி தேவையான வகையில் நட்டயீட்டை பெற்றுக்கொள்வதற்கான முறைமையை  உருவாக்கியுள்ளார்.43 பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 இலட்சம் முதல் 980 இலட்சம் வரை நட்டயீட்டை பெற்றுக்கொண்டுள்ளனர்.இவர்கள் நட்டயீட்டை மாத்திரம் அல்ல. சில நிறுவனங்களிடமிருந்து காப்புறுதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர். நாம் வெளியிட்ட பெயர் பட்டியிலிருந்து யார் காப்புறுதிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பதை காப்புறுதி நிறுவனங்கள் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அடுத்ததாக அவர்களது அசையும் அசையாத சொத்துக்கள் 800 முதல் 900 இலட்சமாக இருந்தால் அவர்களது சொத்துக்கள் தொடர்பிலான அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்பிக்க வேண்டும்.அதிக நட்டயீட்டை பெற்றுக்கொள்வதற்காக சிலர் தமது வீட்டில் நகைகள், இரத்தினகற்கள் இருந்தாக தெரிவித்துள்ளனர். நட்டயீட்டைப் பெற்றுக்கொண்டவர்களின் பிரதேசங்களில் உள்ள மக்கள் எம்மை அழைத்து அவ்வாறான சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனக்கூறுகிறார்கள். இரண்டு ஜன்னல்கள் மாத்திரமே சேதமடைந்திருந்தாக கூறுகின்றனர். ஆனால் இவர்கள் எவ்வாறு இந்தளவு நிதியை பெற்றுக்கொண்டனர் அவர்கள் தமது கட்சியின் ஆதரவாளர்களை பெரவாவியில் முழ்கடிக்கச்செய்து விட்டு தாம் நட்டயீட்டு சமுத்திரத்தில் நன்றாக நீந்தி நீந்தி குளித்துள்ளனர். இதுவே தற்போது புலப்படுகிறது.எனவே இது தொடர்பில் நாம் விசாரணைகளை முன்னெடுப்போம். என்றார். 

Advertisement

Advertisement

Advertisement