• Sep 20 2024

ஆசிரியையின் வங்கிக் கணக்கிலிருந்து மாயமான 20 ஆயிரம் ரூபாய்; சிக்கிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்

Chithra / Aug 11th 2024, 4:00 pm
image

Advertisement


ஆசிரியை ஒருவரின் பணப்பையை திருடி அதிலிருந்த ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி வங்கிக்கணக்கிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில்  சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கிராதுருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

மஹாஓயா சிவில் பாதுகாப்பு படை முகாமில் பணிபுரியும் 41 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் புதிய மெதகம, தியவிட்டகம பகுதியை சேர்ந்தவர் ஆவார். 

கடந்த ஜூன் மாதம் 01ஆம் திகதி ஹோபரிய பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவரின் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பை திருடப்பட்டுள்ளதாக கிராதுருகோட்டை பொலிஸ் நிலையத்தில் அந்த ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டுக்கு அமைய, கிராதுருகோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். 

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,சந்தேக நபர் தெஹியத்தகண்டிய நகருக்கு மற்றுமொரு நபருடன் சென்று வங்கிக்கணக்கில் பணம் எடுத்துச் செல்லப்பட்டமை உறுதிபடுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆசிரியையின் வங்கிக் கணக்கிலிருந்து மாயமான 20 ஆயிரம் ரூபாய்; சிக்கிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆசிரியை ஒருவரின் பணப்பையை திருடி அதிலிருந்த ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி வங்கிக்கணக்கிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில்  சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கிராதுருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.மஹாஓயா சிவில் பாதுகாப்பு படை முகாமில் பணிபுரியும் 41 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் புதிய மெதகம, தியவிட்டகம பகுதியை சேர்ந்தவர் ஆவார். கடந்த ஜூன் மாதம் 01ஆம் திகதி ஹோபரிய பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவரின் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பை திருடப்பட்டுள்ளதாக கிராதுருகோட்டை பொலிஸ் நிலையத்தில் அந்த ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார்.அந்த முறைப்பாட்டுக்கு அமைய, கிராதுருகோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,சந்தேக நபர் தெஹியத்தகண்டிய நகருக்கு மற்றுமொரு நபருடன் சென்று வங்கிக்கணக்கில் பணம் எடுத்துச் செல்லப்பட்டமை உறுதிபடுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement