• Mar 10 2026

வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்ய ரூ.25,000 உதவி - பிரதமரால் வழங்கிவைப்பு

Chithra / Dec 3rd 2025, 1:20 pm
image


வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தினால் ரூ.25,000 நிதி உதவி வழங்கும் நிகழ்வு நேற்று (02) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. 


கொழும்பு மாவட்டத்தின் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவில் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக இவ்வாறு நிதி உதவி நேற்று வழங்கப்பட்டது. 


சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும்போது அவற்றைச் சுத்தம் செய்வதற்கு அரசாங்கத்தால் ரூபாய் 25,000 வழங்கப்படவுள்ளது. தொடக்கத்தில் ரூபாய் 10,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது பணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்ய ரூ.25,000 உதவி - பிரதமரால் வழங்கிவைப்பு வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தினால் ரூ.25,000 நிதி உதவி வழங்கும் நிகழ்வு நேற்று (02) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. கொழும்பு மாவட்டத்தின் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவில் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக இவ்வாறு நிதி உதவி நேற்று வழங்கப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும்போது அவற்றைச் சுத்தம் செய்வதற்கு அரசாங்கத்தால் ரூபாய் 25,000 வழங்கப்படவுள்ளது. தொடக்கத்தில் ரூபாய் 10,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது பணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement