அண்மையில் வீதி விபத்தில் உயிரிழந்த சனத் நிசாந்தவின் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சுப் பதவி, சசீந்திர ராஜபக்சவிற்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் சசீந்திர ராஜபக்ச இராஜாங்க அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொள்வார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சசீந்திர ஏற்கனவே வடிகாலமைப்பு இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.