• May 01 2024

சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி இன்று..!

Chithra / Apr 5th 2024, 8:30 am
image

Advertisement

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்காக 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும் டலஸ் அலகபெரும உள்ளிட்ட 4 பேர் இந்த புதிய கூட்டணியில் இணையமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களைத் தவிர, தமது கடந்த கால தவறை உணர்ந்து, புதிய கூட்டணிக்கு வரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்வதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன்  தெரிவித்தார்.

சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி இன்று.  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்படவுள்ளது.இதன் ஆரம்ப நிகழ்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.தற்போது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்காக 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.எனினும் டலஸ் அலகபெரும உள்ளிட்ட 4 பேர் இந்த புதிய கூட்டணியில் இணையமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களைத் தவிர, தமது கடந்த கால தவறை உணர்ந்து, புதிய கூட்டணிக்கு வரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்வதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன்  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement