• May 21 2024

வவுனியா நகரில் போக்குவரத்து பொலிசாரால் வீதி போக்குவரத்து மறுசீரமைப்பு

Chithra / Apr 30th 2024, 8:49 pm
image

Advertisement


வவுனியா நகரப் பகுதியில் போக்குவரத்து பொலிசாரால் வீதி போக்குவரத்து நடவடிக்கைகள் மறு சீரமைக்கப்பட்டன. 

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் போக்குவரத்து பொலிசாரால் இன்று குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

வவுனியா நகரில் அதிக சனநடமாட்டம் மிக்க பகுதிகளான பசார் வீதியில் இந்த மறுசீரமைப்பு முன்னெடுக்கப்பட்டது. 

இதனடிப்படையில், பசார் வீதியில் இருந்து பள்ளிவாசல் சந்தி நோக்கி செல்லும் போது  0,2,4,6,8 ஆகிய திகதிகளில் பசார் வீதியின் வலது புறமாகவும், 1,3,5,7,9 ஆகிய திகதிகளில் வீதியின் இடது புறமாகவும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. 

இரண்டு வாரகாலப் பகுதியில் இதன் முன்னேற்றம் குறித்து அறிந்த பின் ஏனைய நகர வீதிகளையும் மறு சீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என பொலிசார் மேலும் தெரிவித்தனர். 


வவுனியா நகரில் போக்குவரத்து பொலிசாரால் வீதி போக்குவரத்து மறுசீரமைப்பு வவுனியா நகரப் பகுதியில் போக்குவரத்து பொலிசாரால் வீதி போக்குவரத்து நடவடிக்கைகள் மறு சீரமைக்கப்பட்டன. வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் போக்குவரத்து பொலிசாரால் இன்று குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வவுனியா நகரில் அதிக சனநடமாட்டம் மிக்க பகுதிகளான பசார் வீதியில் இந்த மறுசீரமைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதனடிப்படையில், பசார் வீதியில் இருந்து பள்ளிவாசல் சந்தி நோக்கி செல்லும் போது  0,2,4,6,8 ஆகிய திகதிகளில் பசார் வீதியின் வலது புறமாகவும், 1,3,5,7,9 ஆகிய திகதிகளில் வீதியின் இடது புறமாகவும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரகாலப் பகுதியில் இதன் முன்னேற்றம் குறித்து அறிந்த பின் ஏனைய நகர வீதிகளையும் மறு சீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என பொலிசார் மேலும் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement