• Oct 15 2024

உயிரைப் பறித்த அதிவேகம்; மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்! யாழில் இளம் குடும்பஸ்தர் மரணம்...!

Chithra / May 21st 2024, 8:55 am
image

Advertisement

 

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை  அளவெட்டிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய தியாகராஜா தயா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி மின் கம்பத்துடன் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று சோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

உயிரைப் பறித்த அதிவேகம்; மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் யாழில் இளம் குடும்பஸ்தர் மரணம்.  யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று மாலை  அளவெட்டிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய தியாகராஜா தயா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி மின் கம்பத்துடன் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று சோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement