கொழும்பில், மொரட்டுமுல்ல வில்லோரவத்த பிரதேசத்தில் தளபாடங்கள் மற்றும் மெத்தைகள் தயாரிக்கும் இரண்டு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுமுல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் 57 வயதுடைய பிலியந்தலை தம்பே பகுதியைச் சேர்ந்த ஹேவா வாசம் நிஹால் ரஞ்சித் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த காவலாளி தீயை அணைக்க முயன்ற போது பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் வர்த்தக நிலையமொன்றில் தீ பரவல் - ஒருவர் உயிரிழப்பு கொழும்பில், மொரட்டுமுல்ல வில்லோரவத்த பிரதேசத்தில் தளபாடங்கள் மற்றும் மெத்தைகள் தயாரிக்கும் இரண்டு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுமுல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.விபத்தில் உயிரிழந்தவர் 57 வயதுடைய பிலியந்தலை தம்பே பகுதியைச் சேர்ந்த ஹேவா வாசம் நிஹால் ரஞ்சித் என்பவரே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த காவலாளி தீயை அணைக்க முயன்ற போது பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.