• Oct 18 2024

மின்சார சபை தனியாருக்கு விற்பனை..? சபையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Chithra / May 13th 2024, 12:39 pm
image

Advertisement


மின்சார சபை மறுசீரமைப்பு பணிகள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

இது குறித்து மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாவது”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அபிவிருத்தி பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறவில்லை. 

நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையினையே இடைநிறுத்துமாறு கூறினார்.

மின்சார சபை மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்தம் முன்னெடுக்கப்படும். 

எவ்வாறாயினும், மின்சார சபையினை தனியாருக்கு விற்பனை செய்யும் எண்ணம் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின்சார சபை தனியாருக்கு விற்பனை. சபையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு மின்சார சபை மறுசீரமைப்பு பணிகள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.இது குறித்து மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாவது”முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அபிவிருத்தி பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறவில்லை. நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையினையே இடைநிறுத்துமாறு கூறினார்.மின்சார சபை மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்தம் முன்னெடுக்கப்படும். எவ்வாறாயினும், மின்சார சபையினை தனியாருக்கு விற்பனை செய்யும் எண்ணம் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement