தென்னிந்திய தொலைக்காட்சியில் இடம்பெற்ற 'சரிகமப' எனும் பாடல் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்று முதலாம் இடத்தை பெற்ற கில்மிசாவுக்கு இலங்கைக்கான இந்திய தூதரகம் நினைவுப் பரிசில் வழங்கி கௌரவித்துள்ளது.
இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் நேற்றையதினம்(26) இடம்பெற்ற நிகழ்விலேயே கில்மிசா கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.