• Sep 23 2024

திருகோணமலை கடற்கரையில் கரையொதுங்கும் கடற்பாசிகள் - மீனவர்கள் அவதி! samugammedia

Tamil nila / Oct 14th 2023, 7:18 pm
image

Advertisement

திருகோணமலை  கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடற்பாசிகள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக திருகோணமலை- அலஸ் தோட்டம் பகுதிகளில் உள்ள கடற்கரையோரங்களிலேயே கடற்பாசிகள் கரை ஒதுங்குவதாகவும் தெரிய வருகின்றது.


கடற்பாசி ஒதுங்குவதனால் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற கடற்றொழியாளர்களின் வலையில் பெருமளவான கடற்பாசிகள் சிக்குவதாகவும் இதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதை குறைத்துள்ளதாகவும் இதன் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.



அதிகளவிலான பாசிகள் வலையில் சிக்குவதினால் வலையை சுத்தம் செய்வதற்கே பெருமளவிலான நேரம் செலவாவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.



இதேவேளை தற்போது வெளிநாட்டவர்களின் வீதம் அதிகரித்து வருகின்ற நிலையில் சுற்றுலா பிரதேசமான அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள கடற்கரைகள் அசுத்தமாக காட்சியளிப்பதை காணக்கூடியதாக  இருக்கின்றது


திருகோணமலை கடற்கரையில் கரையொதுங்கும் கடற்பாசிகள் - மீனவர்கள் அவதி samugammedia திருகோணமலை  கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடற்பாசிகள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக திருகோணமலை- அலஸ் தோட்டம் பகுதிகளில் உள்ள கடற்கரையோரங்களிலேயே கடற்பாசிகள் கரை ஒதுங்குவதாகவும் தெரிய வருகின்றது.கடற்பாசி ஒதுங்குவதனால் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற கடற்றொழியாளர்களின் வலையில் பெருமளவான கடற்பாசிகள் சிக்குவதாகவும் இதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதை குறைத்துள்ளதாகவும் இதன் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.அதிகளவிலான பாசிகள் வலையில் சிக்குவதினால் வலையை சுத்தம் செய்வதற்கே பெருமளவிலான நேரம் செலவாவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.இதேவேளை தற்போது வெளிநாட்டவர்களின் வீதம் அதிகரித்து வருகின்ற நிலையில் சுற்றுலா பிரதேசமான அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள கடற்கரைகள் அசுத்தமாக காட்சியளிப்பதை காணக்கூடியதாக  இருக்கின்றது

Advertisement

Advertisement

Advertisement