மட்டக்களப்பில் யானை தாக்கியதில் பாதுகாப்பு வனஜீவராசிகள் திணைக்கள பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மிக நீண்ட காலமாகவிருந்து காட்டு யானைகளின் தாக்குதல்களும், அட்டகாசங்களும் அதிகரித்த வண்ணமாகவே உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் போரதீவுப் பற்றுப் பிரதே செயலாளர் பிரிவுக்குபட்பட்ட வேத்துக்சேனைக் கிராமத்திற்குள் நேற்று இரவு காட்டுயானைகள் புகுந்துள்ளன.
அதனைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மைமையிலுள்ள வெல்லாவெளி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிராம மக்கள் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த உத்தியோகத்தர்கள் யானைகளை விரட்டுத்துவதற்கு முயன்றுள்ளனர்.
அதில் கட்டுப்படாத காட்டு யானை ஒன்று உத்தியோகஸ்த்தர்களை எதிர்த்து தாக்கியுள்ளது.
குறித்த சம்பவத்தில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வெல்லாவெளி காரியாலயத்தில் கடமைபுரிந்து வந்த நுவரெலியாவைச் சேர்ந்த 30 வயதுடைய செல்வராஜ் சிறிதரன் எனும் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் யானை தாக்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் பலி samugammedia மட்டக்களப்பில் யானை தாக்கியதில் பாதுகாப்பு வனஜீவராசிகள் திணைக்கள பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மிக நீண்ட காலமாகவிருந்து காட்டு யானைகளின் தாக்குதல்களும், அட்டகாசங்களும் அதிகரித்த வண்ணமாகவே உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் போரதீவுப் பற்றுப் பிரதே செயலாளர் பிரிவுக்குபட்பட்ட வேத்துக்சேனைக் கிராமத்திற்குள் நேற்று இரவு காட்டுயானைகள் புகுந்துள்ளன.அதனைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மைமையிலுள்ள வெல்லாவெளி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிராம மக்கள் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த உத்தியோகத்தர்கள் யானைகளை விரட்டுத்துவதற்கு முயன்றுள்ளனர்.அதில் கட்டுப்படாத காட்டு யானை ஒன்று உத்தியோகஸ்த்தர்களை எதிர்த்து தாக்கியுள்ளது.குறித்த சம்பவத்தில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வெல்லாவெளி காரியாலயத்தில் கடமைபுரிந்து வந்த நுவரெலியாவைச் சேர்ந்த 30 வயதுடைய செல்வராஜ் சிறிதரன் எனும் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.