நீர்கொழும்பு – சரக்குவ கடற்கரையில் உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு கடலாமைகள் ஒதுங்கியுள்ளன.
நாட்டின் மேற்கு கடற்பரப்பில் கடந்த சில நாட்களுக்குள் 17 கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
8 கடலாமைகள் மீதான பிரேத பரிசோதனைகள் நேற்று (24) இடம்பெற்றதுடன், அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.