திருகோணமலை மாவட்டத்தின் 35 வது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக எல்.வை.ஏ.எஸ்.அருண சந்திரபால இன்று (11) கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
உற்துறைமுக வீதியில் அமைந்துள்ள மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கர் அலுவலகத்தில் நடைபெற்ற பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை அடுத்து அவர் பதவி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இறுதியாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி இருந்த நிலையில் இவர் தற்போது திருகோணமலை மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.
உதவி பொலிஸ் பரிசோதகராக திருகோணமலையில் தமது பொலிஸ் சேவையை ஆரம்பித்திருந்த இவர் அதன் பின்னர், பதவி உயர்வுகள் பலவற்றை பெற்ற நிலையில் தற்போது இம்மாவட்டத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்டத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கடமையேற்பு திருகோணமலை மாவட்டத்தின் 35 வது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக எல்.வை.ஏ.எஸ்.அருண சந்திரபால இன்று (11) கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.உற்துறைமுக வீதியில் அமைந்துள்ள மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கர் அலுவலகத்தில் நடைபெற்ற பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை அடுத்து அவர் பதவி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.இறுதியாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி இருந்த நிலையில் இவர் தற்போது திருகோணமலை மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.உதவி பொலிஸ் பரிசோதகராக திருகோணமலையில் தமது பொலிஸ் சேவையை ஆரம்பித்திருந்த இவர் அதன் பின்னர், பதவி உயர்வுகள் பலவற்றை பெற்ற நிலையில் தற்போது இம்மாவட்டத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.