24 வயதே ஆகும் மலையாள நடிகை சஜேவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் வெளியான 'காக்கா' குறும்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை லஷ்மிகா சஜேவன். நடிப்பை தன்னுடைய பேஷனாக வைத்திருந்த இவர், ஷார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
இதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில், மாரடைப்பு தான் லஷ்மிகா மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தற்போது ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.