மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (17) மாலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு - சிறுமி படுகாயம் samugammedia மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவமானது இன்று (17) மாலை இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.