இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு, 22 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் தொடர்பான முழுமையான விபரங்களை வெளியிட்டுள்ளனர்
ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
ஜனவரி 4 - மாத்தறை, வெலிகம பொலிஸ் பிரிவின் கப்பரத்தொட்ட வள்ளிவெல பகுதியில் நடந்து சென்ற 05 பேரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 26 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்
ஜனவரி 7 - கல்கிஸ்ஸை வீதிப் பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதேபகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 20 வயதுடைய இரண்டு பேர் உயிரிழந்தனர்.
ஜனவரி 09 - அஹுங்கல்ல பகுதியிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜனவரி 13 - தெவிநுவர, தல்பாவிலவில் உள்ள உலர் மீன் வியாபாரி ஒருவரின் வீட்டின் முன், அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் வர்த்தகர் உயிர்தப்பினார்.
ஜனவரி 15 - தொடங்கொடை, வில்பாதவில் உள்ள வீட்டொன்றின் மீது நடத்ப்பட்ட , துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனவரி 16 - மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்., சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதேநாளில், கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி 19 - கல்கிஸ்ஸையின் சிரிபுர பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 24 மற்றும் 36 வயதுடைய இரண்டு பேர் உயிரிழந்தனர்., துப்பாக்கிச் சூடு நடந்த சுமார் 15 நிமிடங்களுக்குள், சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர் சுமார் 1.5 மில்லியன் ஒப்பந்த விலைக்கு கொலையைச் செய்ததாகவும், ஆரம்பத்தில் அவருக்கு 2 இலட்சம் வழங்கப்பட்டதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
ஜனவரி 22 - அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பகுதியில் காரில் வந்த குழுவினர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு , துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஜனவரி 31 - காலி, ஹினிதும, பனங்கல பகுதியில் துப்பாக்கிச் சூடு- மூன்று பேர் கொலைசெய்யப்பட்டனர்., அந்தப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அதன் உரிமையாளர் உட்பட மூன்று பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பெப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
பெப்ரவரி 07 - மினுவங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
பெப்ரவரி 10 - கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் பலியானார்., உயிரிழந்தவர் 43 வயதுடையவர் ஆவார்.
பெப்ரவரி 19 - மித்தேனியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர் 'கஜ்ஜா' என அடையாளம் காணப்பட்டார், மேலும் அவரது 6 வயது மகள் மற்றும் 9 வயது மகனும் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில், அதே நாளில், திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். பூசா சிறைச்சாலையில் இருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு வழக்குக்காக அழைத்து வரப்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடந்தது. வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்ட ஒருவரால் நடத்தப்பட்டது, பின்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூடு கெஹெல்பத்தர பத்மே என்பவரால் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெப்ரவரி 21 - ஜா எல, பமுனுகம, மோர்கன்வத்த கடற்கரையில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்யப்பட்டார்., அதே நாளில் கொட்டாஞ்சேனையில் உள்ள கல்பொத்த சந்திக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அவர்கள் அதே நாளில் கிராண்ட்பாஸ் பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் இருவரும் பொலிஸாரை தாக்க முற்பட்டபோது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.
பெப்ரவரி 26 - மினுவாங்கொடையில் உள்ள பத்தடுவன சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நபர்களில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், மேலும் காயமடைந்த நபர் கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் என்பதை பொலிஸார் தெரிவித்தனர்.
மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு
மார்ச் 08 - கம்பஹாவின் அகரவிட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காயமடைந்த இரண்டு நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மார்ச் 13 - காலி, அக்மீமன தலகல பகுதியில் பூசா சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் சிறிதத் தம்மிக அடையாளம் தெரியாத ஒருவரால் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.,
அதே நாளில், வெலிவேரியவில் உள்ள அரலியகஸ்தேக சந்தியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர். காயமடைந்த நபர் கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய உறவினர் என்பது பின்னர் தெரியவந்தது.
மார்ச் 14 - அம்பலங்கொடை பொலிஸ் பிரிவின் இடம்தொட்ட பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் 'பொடி சுத்தா' என்ற 39 வயதுடையவர்.
மார்ச் 17 - மிதிகமவின் பத்தேகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது., துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, சந்தேக நபர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை
மார்ச் 21 - தெவிநுவர தேவாலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். வேனில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இரண்டு இளைஞர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்களாவர்.
இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் 27 துப்பாக்கிச் சூடு- 22 பேர் உயிரிழப்பு இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு, 22 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் தொடர்பான முழுமையான விபரங்களை வெளியிட்டுள்ளனர்ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்ஜனவரி 4 - மாத்தறை, வெலிகம பொலிஸ் பிரிவின் கப்பரத்தொட்ட வள்ளிவெல பகுதியில் நடந்து சென்ற 05 பேரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 26 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்ஜனவரி 7 - கல்கிஸ்ஸை வீதிப் பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதேபகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 20 வயதுடைய இரண்டு பேர் உயிரிழந்தனர். ஜனவரி 09 - அஹுங்கல்ல பகுதியிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.ஜனவரி 13 - தெவிநுவர, தல்பாவிலவில் உள்ள உலர் மீன் வியாபாரி ஒருவரின் வீட்டின் முன், அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் வர்த்தகர் உயிர்தப்பினார்.ஜனவரி 15 - தொடங்கொடை, வில்பாதவில் உள்ள வீட்டொன்றின் மீது நடத்ப்பட்ட , துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.ஜனவரி 16 - மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்., சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதேநாளில், கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.ஜனவரி 19 - கல்கிஸ்ஸையின் சிரிபுர பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 24 மற்றும் 36 வயதுடைய இரண்டு பேர் உயிரிழந்தனர்., துப்பாக்கிச் சூடு நடந்த சுமார் 15 நிமிடங்களுக்குள், சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர் சுமார் 1.5 மில்லியன் ஒப்பந்த விலைக்கு கொலையைச் செய்ததாகவும், ஆரம்பத்தில் அவருக்கு 2 இலட்சம் வழங்கப்பட்டதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.ஜனவரி 22 - அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பகுதியில் காரில் வந்த குழுவினர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு , துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.ஜனவரி 31 - காலி, ஹினிதும, பனங்கல பகுதியில் துப்பாக்கிச் சூடு- மூன்று பேர் கொலைசெய்யப்பட்டனர்., அந்தப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அதன் உரிமையாளர் உட்பட மூன்று பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.பெப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்பெப்ரவரி 07 - மினுவங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.பெப்ரவரி 10 - கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் பலியானார்., உயிரிழந்தவர் 43 வயதுடையவர் ஆவார்.பெப்ரவரி 19 - மித்தேனியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர் 'கஜ்ஜா' என அடையாளம் காணப்பட்டார், மேலும் அவரது 6 வயது மகள் மற்றும் 9 வயது மகனும் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், அதே நாளில், திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். பூசா சிறைச்சாலையில் இருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு வழக்குக்காக அழைத்து வரப்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடந்தது. வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்ட ஒருவரால் நடத்தப்பட்டது, பின்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.இந்த துப்பாக்கிச் சூடு கெஹெல்பத்தர பத்மே என்பவரால் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.பெப்ரவரி 21 - ஜா எல, பமுனுகம, மோர்கன்வத்த கடற்கரையில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்யப்பட்டார்., அதே நாளில் கொட்டாஞ்சேனையில் உள்ள கல்பொத்த சந்திக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் உயிரிழந்தார்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அவர்கள் அதே நாளில் கிராண்ட்பாஸ் பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் இருவரும் பொலிஸாரை தாக்க முற்பட்டபோது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.பெப்ரவரி 26 - மினுவாங்கொடையில் உள்ள பத்தடுவன சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நபர்களில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், மேலும் காயமடைந்த நபர் கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் என்பதை பொலிஸார் தெரிவித்தனர்.மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடுமார்ச் 08 - கம்பஹாவின் அகரவிட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காயமடைந்த இரண்டு நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.மார்ச் 13 - காலி, அக்மீமன தலகல பகுதியில் பூசா சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் சிறிதத் தம்மிக அடையாளம் தெரியாத ஒருவரால் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்., அதே நாளில், வெலிவேரியவில் உள்ள அரலியகஸ்தேக சந்தியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர். காயமடைந்த நபர் கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய உறவினர் என்பது பின்னர் தெரியவந்தது.மார்ச் 14 - அம்பலங்கொடை பொலிஸ் பிரிவின் இடம்தொட்ட பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் 'பொடி சுத்தா' என்ற 39 வயதுடையவர்.மார்ச் 17 - மிதிகமவின் பத்தேகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது., துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, சந்தேக நபர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லைமார்ச் 21 - தெவிநுவர தேவாலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். வேனில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இரண்டு இளைஞர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்களாவர்.