• Sep 17 2024

அமரர் சிவசிதம்பரத்தின் 22 வது ஆண்டு நினைவு தினம்!

Chithra / Jun 5th 2024, 11:58 am
image

Advertisement

 

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரத்தின் 22 வது ஆண்டு நினைவுதின நிகழ்வு இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.

நெல்லியடியில் அமைந்துள்ள சிவசிதம்பரத்தின் சிலையடியில் குறித்த  நினைவு தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்ததுடன் நினைவேந்தலில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை கரவெட்டியில் பெரியதோட்டத்தில் அமைந்துள்ள  முருகேசு சிவசிதம்பரத்தின்   இல்லத்தில் இன்று கரவெட்டி அபிவிருத்தி  ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன்  தலைவர் உபாலி எஸ்.பொன்னம்பலம் தலைமையில்  நினைவுதின நிகழ்வு  இடம் பெற்றது.

இதில்  அமரர் சிவசிதம்பரத்துடன் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.


அமரர் சிவசிதம்பரத்தின் 22 வது ஆண்டு நினைவு தினம்  மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரத்தின் 22 வது ஆண்டு நினைவுதின நிகழ்வு இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.நெல்லியடியில் அமைந்துள்ள சிவசிதம்பரத்தின் சிலையடியில் குறித்த  நினைவு தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.இதன்போது உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்ததுடன் நினைவேந்தலில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை கரவெட்டியில் பெரியதோட்டத்தில் அமைந்துள்ள  முருகேசு சிவசிதம்பரத்தின்   இல்லத்தில் இன்று கரவெட்டி அபிவிருத்தி  ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன்  தலைவர் உபாலி எஸ்.பொன்னம்பலம் தலைமையில்  நினைவுதின நிகழ்வு  இடம் பெற்றது.இதில்  அமரர் சிவசிதம்பரத்துடன் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement