• Sep 17 2024

குளவி கொட்டுக்கு இலக்கான 6 பெண் தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!

Chithra / Sep 3rd 2024, 1:16 pm
image

Advertisement

 

நல்லதண்ணி, லக்ஷபான தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 06 பெண் தோட்டத் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தோட்டத்தில் இருந்த பெரிய குளவி கூடொன்றிலிருந்த குளவிகள் கலைந்து சென்று தொழிலாளர்கள் மீது தாக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குளவி கொட்டுக்கு இலக்கான 6 பெண் தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்  நல்லதண்ணி, லக்ஷபான தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 06 பெண் தோட்டத் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளது.காயமடைந்தவர்கள் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த தோட்டத்தில் இருந்த பெரிய குளவி கூடொன்றிலிருந்த குளவிகள் கலைந்து சென்று தொழிலாளர்கள் மீது தாக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement