• May 09 2024

பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் - மேலும் 6 மாணவர்கள் கைது!

Chithra / Feb 14th 2024, 2:51 pm
image

Advertisement

 

சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் 3 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 6 மாணவர்களை சமனலவௌ காவல்துறையினர் இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தின் உணவகத்தில் கடந்த 9ஆம் திகதி இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் மாணவி ஒருவரும் 2 மாணவர்களும் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமனலவெ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட 7 சிரேஷ்ட மாணவர்கள் நேற்று முன்தினம் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு சிரேஷ்ட மாணவர்கள் இன்று சமனலவௌ காவல்நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் - மேலும் 6 மாணவர்கள் கைது  சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் 3 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 6 மாணவர்களை சமனலவௌ காவல்துறையினர் இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.குறித்த பல்கலைக்கழகத்தின் உணவகத்தில் கடந்த 9ஆம் திகதி இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் மாணவி ஒருவரும் 2 மாணவர்களும் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமனலவெ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட 7 சிரேஷ்ட மாணவர்கள் நேற்று முன்தினம் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு சிரேஷ்ட மாணவர்கள் இன்று சமனலவௌ காவல்நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement