• May 08 2024

பொதுஜன பெரமுன உறுப்பினர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! இளைஞன் கைது

Chithra / Jan 28th 2024, 2:37 pm
image

Advertisement

 

பொதுஜன பெரமுனவின் மஹியங்கனை உள்ளுராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை தபகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மஹியங்கனை உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் தலையில் தலைக்கவசத்தால் தாக்கியதில் காயமடைந்து கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கந்தகெட்டிய, பதுலுஓயா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்குமிடையில் வாக்குவாதம் மூண்டதையடுத்து சந்தேக நபர் குறித்த உறுப்பினரின் தலையில் தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுஜன பெரமுன உறுப்பினர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல். இளைஞன் கைது  பொதுஜன பெரமுனவின் மஹியங்கனை உள்ளுராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.மஹியங்கனை தபகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மஹியங்கனை உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் தலையில் தலைக்கவசத்தால் தாக்கியதில் காயமடைந்து கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தகெட்டிய, பதுலுஓயா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இருவருக்குமிடையில் வாக்குவாதம் மூண்டதையடுத்து சந்தேக நபர் குறித்த உறுப்பினரின் தலையில் தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement