• Jun 18 2025

நிலாவெளியில் இடம்பெற்ற விபத்தில்- சமூக செயற்பாட்டாளர் உயிரிழப்பு!

Thansita / Jun 18th 2025, 7:02 pm
image

திருகோணமலை -நிலாவெளி பகுதியில் இன்று (18) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்துச் சம்பவத்தில் சமூக செயற்பாட்டாளர் உயிரிழந்துள்ளார்

முச்சக்கர வண்டியில் பயணித்த திரியாயைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மாணிக்கநடராசா என்பவரே உயிரிழந்துள்ளார்

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது

 முச்சக்கரவண்டியில் குறித்த நபரும் அவரது மனைவியும் சென்ற நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளது

இந்நிலையில் இவர் உயிரிழந்துள்ளதுடன் மனைவி  பலத்த காயங்களுக்கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேல் அதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திரியாய் காணி மீட்பு போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்தி பல செயற்பாடுகளில் இவர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நிலாவெளியில் இடம்பெற்ற விபத்தில்- சமூக செயற்பாட்டாளர் உயிரிழப்பு திருகோணமலை -நிலாவெளி பகுதியில் இன்று (18) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்துச் சம்பவத்தில் சமூக செயற்பாட்டாளர் உயிரிழந்துள்ளார்முச்சக்கர வண்டியில் பயணித்த திரியாயைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மாணிக்கநடராசா என்பவரே உயிரிழந்துள்ளார்இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது முச்சக்கரவண்டியில் குறித்த நபரும் அவரது மனைவியும் சென்ற நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளதுஇந்நிலையில் இவர் உயிரிழந்துள்ளதுடன் மனைவி  பலத்த காயங்களுக்கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவரது சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேல் அதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.திரியாய் காணி மீட்பு போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்தி பல செயற்பாடுகளில் இவர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement