• Sep 20 2024

இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சிலர் சதிப்புரட்சிக்கு முயற்சி - மொட்டு எம்.பி பரபரப்புத் தகவல்

Chithra / Aug 7th 2024, 12:26 pm
image

Advertisement

 

2022 அரகலயவின் போது இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சிலர் இராணுவ புரட்சிக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள் அது மீண்டும் இடம்பெறுவதற்கு அனுமதிக்க கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2022 இல் இராணுவத் தலைவர்களாலும் பாதுகாப்பு தரப்பின் உயர்மட்டத்தினராலும் நாட்டின் தலைவரை பாதுகாக்க முடியவில்லை.

கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்திற்கு சவேந்திர சில்வா பாதுகாப்பை வழங்க மறுத்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வேளை முன்னாள் ஜனாதிபதி என்னை அழைத்து மிரிஹானவில் உள்ள தனது வீட்டிற்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு இராணுவ தளபதியிடம் வேண்டுகோள் விடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இராணுவ வாகனங்களை பயன்படுத்தி மிரிஹானவிற்கு செல்லும் வீதிகளை  மூடுமாறு நான் கேட்டுக்கொண்டேன்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த சவேந்திரசில்வா, எங்கள் ஆட்களை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குமாறு கேட்டுக்கொண்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் விடயங்களில் இராணுவம் தலையிட முடியாது என சவேந்திர சில்வா தெரிவித்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சிலர் சதிப்புரட்சிக்கு முயற்சி - மொட்டு எம்.பி பரபரப்புத் தகவல்  2022 அரகலயவின் போது இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சிலர் இராணுவ புரட்சிக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.அரசியல் தலைவர்கள் அது மீண்டும் இடம்பெறுவதற்கு அனுமதிக்க கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.2022 இல் இராணுவத் தலைவர்களாலும் பாதுகாப்பு தரப்பின் உயர்மட்டத்தினராலும் நாட்டின் தலைவரை பாதுகாக்க முடியவில்லை.கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்திற்கு சவேந்திர சில்வா பாதுகாப்பை வழங்க மறுத்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.அவ்வேளை முன்னாள் ஜனாதிபதி என்னை அழைத்து மிரிஹானவில் உள்ள தனது வீட்டிற்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு இராணுவ தளபதியிடம் வேண்டுகோள் விடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.இராணுவ வாகனங்களை பயன்படுத்தி மிரிஹானவிற்கு செல்லும் வீதிகளை  மூடுமாறு நான் கேட்டுக்கொண்டேன்.ஆனால் அதனை ஏற்க மறுத்த சவேந்திரசில்வா, எங்கள் ஆட்களை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குமாறு கேட்டுக்கொண்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அரசியல் விடயங்களில் இராணுவம் தலையிட முடியாது என சவேந்திர சில்வா தெரிவித்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement