• Apr 25 2026

தந்தையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன் கைது!

Aathira / Apr 25th 2026, 8:35 am
image

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவத்தில், தனது தந்தையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (24) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 64 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமே இந்த கொலைக்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்தின் பேரில் 33 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன் கைது மாத்தளை பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவத்தில், தனது தந்தையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (24) காலை இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் 64 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமே இந்த கொலைக்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சந்தேகத்தின் பேரில் 33 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement