வீதியில் குப்பைகள் கொட்டுவது பொதுவாக நம்மவர்கள் எல்லோரிடமும் உள்ள கெட்ட பழக்கம்.
வீட்டிலுள்ள குப்பைகளை எடுத்துச் சென்று வேறு யாருடையதோ வீட்டுக்கு அருகில் வீதியோரம் வீசிச் செல்பவர் பலர் உள்ளனர்.
சூழலை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமை என்பதை நாம் அறிவோம்.
அதனால்தான் இங்கே குப்பை போடாதீர்கள் அறிவிப்பு எல்லா வீதிகளிலும் உள்ளது. ஆனாலும் அதை நம்மவர்கள் கண்டுகொள்வதில்லை.
இப்படியானவர்களிற்கு இன்னொரு உத்தியை கடைப்பிடித்துள்ளார் யாழ்ப்பாண வாசியொருவர்.
யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயில் வீதியிலுள்ள வீடொன்றின் முன்பாக விசித்திரமான அறிவித்தல் காணப்படுகிறது.
அதில் “சூனியம் வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை கொட்டாதீர்கள்" என எழுதப்பட்டுள்ளது.
இதை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது.
இங்கே சூனியம் வைக்கப்பட்டுள்ளது. விபத்து நிச்சயம் - யாழில் ஒட்டப்பட்ட விசித்திரமான அறிவித்தலால் பரபரப்பு samugammedia வீதியில் குப்பைகள் கொட்டுவது பொதுவாக நம்மவர்கள் எல்லோரிடமும் உள்ள கெட்ட பழக்கம். வீட்டிலுள்ள குப்பைகளை எடுத்துச் சென்று வேறு யாருடையதோ வீட்டுக்கு அருகில் வீதியோரம் வீசிச் செல்பவர் பலர் உள்ளனர்.சூழலை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமை என்பதை நாம் அறிவோம்.அதனால்தான் இங்கே குப்பை போடாதீர்கள் அறிவிப்பு எல்லா வீதிகளிலும் உள்ளது. ஆனாலும் அதை நம்மவர்கள் கண்டுகொள்வதில்லை.இப்படியானவர்களிற்கு இன்னொரு உத்தியை கடைப்பிடித்துள்ளார் யாழ்ப்பாண வாசியொருவர்.யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயில் வீதியிலுள்ள வீடொன்றின் முன்பாக விசித்திரமான அறிவித்தல் காணப்படுகிறது.அதில் “சூனியம் வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை கொட்டாதீர்கள்" என எழுதப்பட்டுள்ளது.இதை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது.