• Jul 01 2025

சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட வட்டி! - ஜூலை முதல் அமலுக்கு வரும் திட்டம்

Chithra / Jul 1st 2025, 11:51 am
image


2025 வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில், அமைச்சரவை ஒப்புதலுக்கு அமைய ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் 'சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் தொடங்கப்படுவதை நிதி அமைச்சு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. 

இந்தத் திட்டம் இலங்கையில் உள்ள சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்கு (FD) மேம்பட்ட வருமானத்தை வழங்குவதன் மூலம் கூடுதல் நிதி ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கை குடிமக்களுக்கு இது பொருந்தும். இந்தத் திட்டத்தின் கீழ் நிலையான வைப்புத்தொகைகளை ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் திறக்கலாம். 

மேலும் அத்தகைய அனைத்து வைப்புத்தொகைகளும் 12 மாத நிலையான வைப்பு காலத்தைக் கொண்டிருக்க வேண்டும். 

இந்தத் திட்டத்தின் கீழ் வைப்புத்தொகைகளின் மொத்த மதிப்பு, பங்கேற்கும் வங்கிகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், ஒரு வைப்புத்தொகையாளருக்கு ரூ. 1 மில்லியனுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட வட்டி - ஜூலை முதல் அமலுக்கு வரும் திட்டம் 2025 வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில், அமைச்சரவை ஒப்புதலுக்கு அமைய ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் 'சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் தொடங்கப்படுவதை நிதி அமைச்சு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் இலங்கையில் உள்ள சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்கு (FD) மேம்பட்ட வருமானத்தை வழங்குவதன் மூலம் கூடுதல் நிதி ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கை குடிமக்களுக்கு இது பொருந்தும். இந்தத் திட்டத்தின் கீழ் நிலையான வைப்புத்தொகைகளை ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் திறக்கலாம். மேலும் அத்தகைய அனைத்து வைப்புத்தொகைகளும் 12 மாத நிலையான வைப்பு காலத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் வைப்புத்தொகைகளின் மொத்த மதிப்பு, பங்கேற்கும் வங்கிகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், ஒரு வைப்புத்தொகையாளருக்கு ரூ. 1 மில்லியனுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement