கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பத்கொட பகுதியில் மண்சரிவு காரணமாக குறித்த பாதையூடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பண்டாரவலை கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர், ஆசிரியர்கள் அல்லது கல்விசாரா ஊழியர்களில் எவரேனும் மேற்குறிப்பிட்ட வீதியூடாக பாடசாலை வருவதற்கு சிரமம் இருந்தால், அவ்வாறான உத்தியோகத்தர்கள் அருகிலுள்ள பாடசாலையில் கடமைக்குச் சமூகமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த சிரமங்கள் காரணமாக, சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கலாம் என்றார்.
மேலும், பாடசாலைகளில் பணிபுரியும் முதன்மை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மேலும் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத் அதிபர்களிடம் கேட்டுள்ளார்.
114 பாடசாலைகளுக்கு வெளியான விசேட அறிவிப்பு. samugammedia கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பத்கொட பகுதியில் மண்சரிவு காரணமாக குறித்த பாதையூடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், பண்டாரவலை கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர், ஆசிரியர்கள் அல்லது கல்விசாரா ஊழியர்களில் எவரேனும் மேற்குறிப்பிட்ட வீதியூடாக பாடசாலை வருவதற்கு சிரமம் இருந்தால், அவ்வாறான உத்தியோகத்தர்கள் அருகிலுள்ள பாடசாலையில் கடமைக்குச் சமூகமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத் குறித்த பிராந்தியத்திலுள்ள 144 பாடசாலைகளின் அதிபர்களுக்கு இவ்வறிவித்தலை வழங்கியுள்ளார்.எனினும், இந்த சிரமங்கள் காரணமாக, சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கலாம் என்றார்.மேலும், பாடசாலைகளில் பணிபுரியும் முதன்மை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மேலும் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத் அதிபர்களிடம் கேட்டுள்ளார்.