மொனராகலை புத்தல – வெல்லவாய பகுதிகளில் கடந்த தினங்களுக்கு முன்னரும் நேற்றும் ஏற்பட்ட நில அதிர்வுகள் தொடர்பில் விசேட ஆய்வு ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட நில அதிர்வுகளையும் அண்மைய நில அதிர்வுகளையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளதாக அந்த பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஸ்டெரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நில அதிர்வினால் ஏனைய நாடுகளையும் காட்டிலும் இலங்கைக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கின்றது. இருப்பினும், குறித்த பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதற்கான காரணம் என்வென்பது குறித்த ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கையின் நில அதிர்வுகள் தொடர்பில் விசேட ஆய்வு SamugamMedia மொனராகலை புத்தல – வெல்லவாய பகுதிகளில் கடந்த தினங்களுக்கு முன்னரும் நேற்றும் ஏற்பட்ட நில அதிர்வுகள் தொடர்பில் விசேட ஆய்வு ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட நில அதிர்வுகளையும் அண்மைய நில அதிர்வுகளையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளதாக அந்த பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஸ்டெரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.நில அதிர்வினால் ஏனைய நாடுகளையும் காட்டிலும் இலங்கைக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கின்றது. இருப்பினும், குறித்த பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதற்கான காரணம் என்வென்பது குறித்த ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.