இலங்கை இந்தியமீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ் தலைமையில் இடம்பெற்றுவரும் இப் பேச்சுவார்த்தையில், இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
குறித்த பேச்சுவார்த்தையில் அனைத்து இந்திய விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா, இராமேஸ்வரம் பாரம்பரிய விசைப்படகு மீனவ சங்கத்தை சேர்ந்த ஆல்வின் பெர்னாண்டோ,மண்டபம் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த இருதயராஜு ஜஸ்ரின், தங்கச்சிமடம் விசைப்படகு மீனவர்சங்கத்தை சேர்ந்த ஜெருசிமான்ஸ்,பாம்பன் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த ராஜப்பன் சகாயம் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.
இலங்கை மீனவர்பிரதிநிதிகள் சார்பாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ்,செயலாளர் முகமட் ஆலம்,ஊடகபேச்சாளர் அ.அன்னராசா,செயற்குழு உறுப்பினர்வீ,.சுப்பிரமணியம்,பிரதி செயலாளர் கே.றீட்டாவசந்தி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக இருதரப்புக்களையும் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவம் அழிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை-இந்திய மீனவர் பிரச்சனை: இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியாவில் ஆரம்பம். இலங்கை இந்தியமீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ் தலைமையில் இடம்பெற்றுவரும் இப் பேச்சுவார்த்தையில், இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.குறித்த பேச்சுவார்த்தையில் அனைத்து இந்திய விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா, இராமேஸ்வரம் பாரம்பரிய விசைப்படகு மீனவ சங்கத்தை சேர்ந்த ஆல்வின் பெர்னாண்டோ,மண்டபம் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த இருதயராஜு ஜஸ்ரின், தங்கச்சிமடம் விசைப்படகு மீனவர்சங்கத்தை சேர்ந்த ஜெருசிமான்ஸ்,பாம்பன் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த ராஜப்பன் சகாயம் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.இலங்கை மீனவர்பிரதிநிதிகள் சார்பாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ்,செயலாளர் முகமட் ஆலம்,ஊடகபேச்சாளர் அ.அன்னராசா,செயற்குழு உறுப்பினர்வீ,.சுப்பிரமணியம்,பிரதி செயலாளர் கே.றீட்டாவசந்தி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.இதேவேளை பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக இருதரப்புக்களையும் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவம் அழிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.