உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத சுட்டெண்ணில் இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சர்வதேச நிறுவனத்தால், பயங்கரவாதத்தின் தாக்கத்தின் அடிப்படையில் நாடுகளை, உலகளாவிய பயங்கரவாத சுட்டெண்ணில் தரவரிசைப்படுத்துகிறது.
உலக மக்கள் தொகையில் 99.7 சதவீத மக்களை உள்ளடக்கிய, 163 நாடுகளுக்கு பயங்கரவாதத்தின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்து, உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல் கொண்ட நாடுகளின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, உலகில் அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள நாடாக புர்கினா பாசோ முதலிடத்தில் உள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தான் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள நாடுகளில் சிரியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தக் குறியீட்டின்படி, பயங்கரவாத ஆபத்து மிகக் குறைந்த நாடாக, உலகளாவிய பயங்கரவாதக் சுட்டெண்ணில் இலங்கை 100வது இடத்தில் உள்ளது.
2023 ஆம் ஆண்டில் இந்தக் குறியீட்டில் 36வது இடத்தில் இருந்த இலங்கை, 64 இடங்கள் பின்தங்கி, பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் குறைப்பதில் தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதல்களும் பதிவாகாத நாடுகளாக இலங்கை மற்றும் பூட்டான் பெயரிடப்பட்டுள்ளன.
மேலும் 2019ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
உலகில் பயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடாக இலங்கை உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத சுட்டெண்ணில் இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சர்வதேச நிறுவனத்தால், பயங்கரவாதத்தின் தாக்கத்தின் அடிப்படையில் நாடுகளை, உலகளாவிய பயங்கரவாத சுட்டெண்ணில் தரவரிசைப்படுத்துகிறது.உலக மக்கள் தொகையில் 99.7 சதவீத மக்களை உள்ளடக்கிய, 163 நாடுகளுக்கு பயங்கரவாதத்தின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்து, உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல் கொண்ட நாடுகளின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமைய, உலகில் அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள நாடாக புர்கினா பாசோ முதலிடத்தில் உள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தான் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள நாடுகளில் சிரியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தக் குறியீட்டின்படி, பயங்கரவாத ஆபத்து மிகக் குறைந்த நாடாக, உலகளாவிய பயங்கரவாதக் சுட்டெண்ணில் இலங்கை 100வது இடத்தில் உள்ளது.2023 ஆம் ஆண்டில் இந்தக் குறியீட்டில் 36வது இடத்தில் இருந்த இலங்கை, 64 இடங்கள் பின்தங்கி, பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் குறைப்பதில் தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தெற்காசிய பிராந்தியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதல்களும் பதிவாகாத நாடுகளாக இலங்கை மற்றும் பூட்டான் பெயரிடப்பட்டுள்ளன.மேலும் 2019ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.