• May 17 2024

இலங்கையில் பெண் ஒருவருக்கு செய்யப்பட்ட அரிய வகை சத்திர சிகிச்சை வெற்றி...!

Chithra / Mar 11th 2024, 5:24 pm
image

Advertisement

 

இலங்கையில் நீண்டகாலமாக முதுகுத்தண்டு வலியால் அவதிப்பட்டு வந்த பெண்ணுக்கு மிக அரிய வகை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

72 வயதான முத்துமெணிக்கே பல வருடங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

எத்தனையோ சிகிச்சை அளித்தும் அவரின் முதுகு வலி குணமாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அதையடுத்து, இந்த பெண்ணின் நிலையை துல்லியமாக கண்டறிந்த பதுளை போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை வைத்தியர் டொக்டர் லக்மால் ஹேவகே, அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளார்.

இந்த சத்திர சிகிச்சையானது இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்படாத மிக அரிய வகை சத்திர சிகிச்சை என தெரியவருகின்றது.

எண்டோஸ்கோபிக் முறையில் முதுகுத்தண்டில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை தனித்தன்மை வாய்ந்தது, 

ஏனெனில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் வயது இல்லை, மேலும் மயக்க மருந்து இல்லாமல் குறித்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி தற்போது பூரண குணமடைந்து வருவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ துறையின் முன்னேற்றத்துடன் அண்மையில் பல அதிர்ஷ்வசமான நிகழ்வுகள் உலகில் இடம்பெற்று வருகின்ற நிலையில், 

பதுளை போதனா வைத்தியசாலையில் இவ் அரிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை அதிகம் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் பெண் ஒருவருக்கு செய்யப்பட்ட அரிய வகை சத்திர சிகிச்சை வெற்றி.  இலங்கையில் நீண்டகாலமாக முதுகுத்தண்டு வலியால் அவதிப்பட்டு வந்த பெண்ணுக்கு மிக அரிய வகை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,72 வயதான முத்துமெணிக்கே பல வருடங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.எத்தனையோ சிகிச்சை அளித்தும் அவரின் முதுகு வலி குணமாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.அதையடுத்து, இந்த பெண்ணின் நிலையை துல்லியமாக கண்டறிந்த பதுளை போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை வைத்தியர் டொக்டர் லக்மால் ஹேவகே, அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளார்.இந்த சத்திர சிகிச்சையானது இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்படாத மிக அரிய வகை சத்திர சிகிச்சை என தெரியவருகின்றது.எண்டோஸ்கோபிக் முறையில் முதுகுத்தண்டில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை தனித்தன்மை வாய்ந்தது, ஏனெனில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் வயது இல்லை, மேலும் மயக்க மருந்து இல்லாமல் குறித்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி தற்போது பூரண குணமடைந்து வருவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.மருத்துவ துறையின் முன்னேற்றத்துடன் அண்மையில் பல அதிர்ஷ்வசமான நிகழ்வுகள் உலகில் இடம்பெற்று வருகின்ற நிலையில், பதுளை போதனா வைத்தியசாலையில் இவ் அரிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை அதிகம் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement